Thirukkural



 

 

கடவுள் வாழ்த்து

 

1   1-1   

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

   

 

2   1-4   

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

   

 

3   1-5   

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

   

 

4   1-10   

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

   

 


 

 

அறன் வலியுறுத்தல்

 

   

Introduction – அறன் வலியுறுத்தல்

   

 

5   4-31   

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

   

 

6   4-34   

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற

   

 

7   4-35   

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

   

 


 

 

அன்புடைமை

 

   

Introduction – அன்புடைமை

   

 

8   8-76   

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

   

 

9   8-74   

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

   

 

10   8-77   

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்

   

 

11   8-80   

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

   

 


 

 

விருந்தோம்பல்

 

   

Introduction – விருந்தோம்பல்

   

 

12   9-84   

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்

   

 

13   9-83   

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று

   

 

14   9-86   

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு

   

 

15   9-82   

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

   

 


 

 

இனியவை கூறல்

 

   

Introduction – இனியவை கூறல்

   

 

16   10-100   

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

   

 

17   10-95   

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற

   

 

18   10-94   

துன்புறூஉம் துவ்வாமை இல்லாக்கும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

   

 

19   10-99   

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது

   

 


 

 

செய் நன்றி அறிதல்

 

   

Introduction – செய் நன்றி அறிதல்

   

 

20   11-101   

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது

   

 

21   11-103   

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது

   

 

22   11-104   

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்

   

 

23   11-110   

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

   

 


 

 

அடக்கமுடைமை

 

   

Introduction – அடக்கமுடைமை

   

 

24   13-121   

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்

   

 

25   13-126   

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

   

 

26   13-127   

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

   

 

27   13-129   

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

   

 


 

 

ஒழுக்கமுடைமை

 

   

Introduction – ஒழுக்கமுடைமை

   

 

28   14-131   

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

   

 

29   14-137   

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி

   

 

30   14-140   

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

   

 

31   14-138   

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

   

 


 

 

பொறையுடைமை

 

   

Introduction – பொறையுடைமை

   

 

32   16-151   

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

   

 

33   16-152   

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று

   

 

34   16-158   

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்

   

 

35   16-156   

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்

   

 


 

 

மக்கட் பேறு

 

   

Introduction – மக்கட் பேறு

   

 

36   7-68   

தம்மிந்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது

   

 

37   7-67   

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்

   

 

38   7-70   

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

   

 

39   7-69   

ஈன்ற் பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

   

 


 

 

அழுக்காறாமை

 

   

Introduction – அழுக்காறாமை

   

 

40   17-165   

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடீன் பது

   

 

41   17-168   

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்

   

 

42   17-166   

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

   

 

43   17-164   

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

   

 


 

 

புறம் கூறாமை

 

   

Introduction – புறம் கூறாமை

   

 

44   19-182   

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை

   

 

45   19-183   

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூற்றும் ஆக்கத் தரும்

   

 

46   19-184   

கண்ணின்று கண்ண்றச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல்

   

 

47   19-190   

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

   

 


 

 

பயனிலசொல்லாமை

 

   

Introduction – பயனிலசொல்லாமை

   

 

48   20-191   

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்

   

 

49   20-195   

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்

   

 

50   20-196   

பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்

   

 

51   20-200   

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்

   

 


 

 

தீவினை அச்சம்

 

   

Introduction – தீவினை அச்சம்

   

 

52   21-202   

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

   

 

53   21-205   

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து

   

 

54   21-204   

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

   

 

55   21-203   

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்

   

 


 

 

ஒப்புரவு அறிதல்

 

   

Introduction – ஒப்புரவு அறிதல்

   

 

56   22-211   

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு

   

 

57   22-212   

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு

   

 

58   22-216   

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்

   

 

59   22-215   

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு

   

 


 

 

ஈகை

 

   

Introduction – ஈகை

   

 

60   23-221   

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து

   

 

61   23-228   

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்

   

 

62   23-226   

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி

   

 

63   23-229   

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்

   

 

64   23-230   

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை

   

 


 

 

புகழ்

 

   

Introduction – புகழ்

   

 

65   24-231   

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு

   

 

66   24-236   

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

   

 

67   24-237   

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

   

 

68   24-238   

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்

   

 


 

 

அருளுடைமை

 

   

Introduction – அருளுடைமை

   

 

69   25-241   

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள

   

 

70   25-243   

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்

   

 

71   25-247   

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

   

 

72   25-250   

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து

   

 


 

 

புலால் மறுத்தல்

 

   

Introduction – புலால் மறுத்தல்

   

 

73   26-251   

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்

   

 

74   26-252   

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

   

 

75   26-259   

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று

   

 

76   26-260   

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்

   

 


 

 

வாய்மை

 

   

Introduction – வாய்மை

   

 

77   30-291   

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

   

 

78   30-292   

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

   

 

79   30-293   

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்

   

 

80   30-294   

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்

   

 


 

 

வெகுளாமை

 

   

Introduction – வெகுளாமை

   

 

81   31-301   

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துச்

காக்கின்என் காவாக்கால் என்

   

 

82   31-304   

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற

   

 

83   31-305   

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

   

 

84   31-307   

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

   

 


 

 

இன்னா செய்யாமை

 

   

Introduction – இன்னா செய்யாமை

   

 

85   32-311   

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்

   

 

86   32-319   

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்

   

 

87   32-317   

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை

   

 

88   32-314   

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்

   

 


 

 

நிலையாமை

 

   

Introduction – நிலையாமை

   

 

89   34-331   

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை

   

 

90   34-332   

கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று

   

 

91   34-336   

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு

   

 

92   34-339   

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு

   

 


 

 

கல்வி

 

   

Introduction – கல்வி

   

 

93   40-391   

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

   

 

94   40-392   

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

   

 

95   40-393   

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

   

 

96   40-395   

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்

   

 


 

 

கல்லாமை

 

   

Introduction – கல்லாமை

   

 

97   41-403   

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்

   

 

98   41-405   

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்

   

 

99   41-408   

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு

   

 

100   41-410   

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

   

 


 

 

கேள்வி

 

   

Introduction – கேள்வி

   

 

101   42-411   

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை

   

 

102   42-412   

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்

   

 

103   42-414   

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை

   

 

104   42-420   

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்

   

 


 

 

அறிவுடைமை

 

   

Introduction – அறிவுடைமை

   

 

105   43-423   

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

   

 

106   43-427   

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்

   

 

107   43-428   

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

   

 

108   43-430   

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்

   

 


 

 

குற்றம் கடிதல்

 

   

Introduction – குற்றம் கடிதல்

   

 

109   44-431   

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து

   

 

110   44-433   

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்

   

 

111   44-434   

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் தரூஉம் பகை

   

 

112   44-435   

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடு

   

 


 

 

பெரியாரைத் துணைகோடல்

 

   

Introduction – பெரியாரைத் துணைகோடல்

   

 

113   45-446   

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்

   

 

114   45-448   

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்

   

 

115   45-449   

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை

   

 

116   45-450   

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

   

 


 

 

சிற்றினம் சேராமை

 

   

Introduction – சிற்றினம் சேராமை

   

 

117   46-451   

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்

   

 

118   46-452   

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு

   

 

119   46-455   

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்

   

 

120   46-457   

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்

   

 


 

 

தெரிந்து செயல்வகை

 

   

Introduction – தெரிந்து செயல்வகை

   

 

121   47-462   

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

   

 

122   47-463   

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்

   

 

123   47-466   

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்

   

 

124   47-467   

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

   

 


 

 

வலியறிதல்

 

   

Introduction – வலியறிதல்

   

 

125   48-471   

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்

   

 

126   48-475   

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்

   

 

127   48-478   

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை

   

 

128   48-479   

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்

   

 


 

 

காலமறிதல்

 

   

Introduction – காலமறிதல்

   

 

129   49-481   

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது

   

 

130   49-483   

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்

   

 

131   49-484   

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்

   

 

132   49-490   

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

   

 


 

 

இடனறிதல்

 

   

Introduction – இடனறிதல்

   

 

133   50-495   

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற

   

 

134   50-496   

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து

   

 

135   50-498   

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்

   

 

136   50-500   

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு

   

 


 

 

தெரிந்து தெளிதல்

 

   

Introduction – தெரிந்து தெளிதல்

   

 

137   51-503   

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு

   

 

138   51-504   

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

   

 

139   51-505   

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்

   

 

140   51-510   

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்

   

 


 

 

தெரிந்து வினையாடல்

 

   

Introduction – தெரிந்து வினையாடல்

   

 

141   52-511   

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்

   

 

142   52-513   

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு

   

 

143   52-517   

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

   

 

144   52-518   

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்

   

 


 

 

சுற்றம் தழால்

 

   

Introduction – சுற்றம் தழால்

   

 

145   53-522   

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்

   

 

146   53-523   

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று

   

 

147   53-526   

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்

   

 

148   53-527   

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள

   

 


 

 

செங்கோன்மை

 

   

Introduction – செங்கோன்மை

   

 

149   55-541   

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை

   

 

150   55-542   

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி

   

 

151   55-548   

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்

   

 

152   55-549   

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்

   

 


 

 

கொடுங்கோன்மை

 

   

Introduction – கொடுங்கோன்மை

   

 

153   56-551   

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து

   

 

154   56-552   

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு

   

 

155   56-553   

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்

   

 

156   56-557   

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு

   

 


 

 

இறைமாட்சி

 

   

Introduction – இறைமாட்சி

   

 

157   39-381   

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

   

 

158   39-382   

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

   

 

159   39-383   

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு

   

 

160   39-385   

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

   

 


 

 

ஊக்கமுடைமை

 

   

Introduction – ஊக்கமுடைமை

   

 

161   60-594   

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை

   

 

162   60-593   

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்

   

 

163   60-595   

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு

   

 

164   60-600   

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு

   

 


 

 

மடியின்மை

 

   

Introduction – மடியின்மை

   

 

165   61-601   

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்

   

 

166   61-603   

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து

   

 

167   61-605   

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

   

 

168   61-606   

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது

   

 


 

 

ஆள்வினையுடைமை

 

   

Introduction – ஆள்வினையுடைமை

   

 

169   62-611   

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

   

 

170   62-615   

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்

   

 

171   62-619   

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

   

 

172   62-620   

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்

   

 


 

 

இடுக்கணழியாமை

 

   

Introduction – இடுக்கணழியாமை

   

 

173   63-621   

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்

   

 

174   63-623   

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்

   

 

175   63-624   

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

   

 

176   63-629   

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்

   

 


 

 

சொல்வன்மை

 

   

Introduction – சொல்வன்மை

   

 

177   65-642   

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

   

 

178   65-643   

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்

   

 

179   65-645   

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

   

 

180   65-647   

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது

   

 


 

 

வினைத் திட்பம்

 

   

Introduction – வினைத் திட்பம்

   

 

181   67-661   

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற

   

 

182   67-662   

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

   

 

183   67-664   

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

   

 

184   67-667   

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து

   

 


 

 

வினை செயல்வகை

 

   

Introduction – வினை செயல்வகை

   

 

185   68-671   

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது

   

 

186   68-674   

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்

   

 

187   68-675   

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்

   

 

188   68-676   

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்

   

 


 

 

குறிப்பறிதல்

 

   

Introduction – குறிப்பறிதல்

   

 

189   71-701   

கூறாமை நோக்ககே குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி

   

 

190   71-704   

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு

   

 

191   71-705   

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்

   

 

192   71-706   

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்

   

 


 

 

அவையறிதல்

 

   

Introduction – அவையறிதல்

   

 

193   72-711   

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்

   

 

194   72-714   

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்

   

 

195   72-717   

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து

   

 

196   72-720   

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்

   

 


 

 

அவை அஞ்சாமை

 

   

Introduction – அவை அஞ்சாமை

   

 

197   73-723   

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்

   

 

198   73-726   

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு

   

 

199   73-729   

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்

   

 

200   73-730   

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்

   

 


 

 

நாடு

 

   

Introduction – நாடு

   

 

201   74-731   

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு

   

 

202   74-733   

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு

   

 

203   74-734   

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு

   

 

204   74-738   

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து

   

 


 

 

பொருள் செயல்வகை

 

   

Introduction – பொருள் செயல்வகை

   

 

205   76-751   

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்

   

 

206   76-752   

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு

   

 

207   76-754   

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்

   

 

208   76-755   

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்

   

 


 

 

நட்பு

 

   

Introduction – நட்பு

   

 

209   79-781   

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு

   

 

210   79-782   

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு

   

 

211   79-783   

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

   

 

212   79-784   

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

   

 


 

 

நட்பாராய்தல்

 

   

Introduction – நட்பாராய்தல்

   

 

213   80-791   

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு

   

 

214   80-793   

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு

   

 

215   80-795   

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நடபு ஆய்ந்து கொளல்

   

 

216   80-797   

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்

   

 


 

 

தீ நட்பு

 

   

Introduction – தீ நட்பு

   

 

217   82-811   

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது

   

 

218   82-812   

உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்

   

 

219   82-813   

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்

   

 

220   82-814   

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை

   

 


 

 

பேதைமை

 

   

Introduction – பேதைமை

   

 

221   84-831   

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்

   

 

222   84-832   

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல்

   

 

223   84-833   

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்

   

 

224   84-834   

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்

   

 


 

 

புல்லறிவாண்மை

 

   

Introduction – புல்லறிவாண்மை

   

 

225   85-843   

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது

   

 

226   85-844   

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு

   

 

227   85-848   

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்

   

 

228   85-850   

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்

   

 


 

 

இகல்

 

   

Introduction – இகல்

   

 

229   86-851   

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்

   

 

230   86-853   

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்

   

 

231   86-854   

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்

   

 

232   86-860   

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு

   

 


 

 

Please leave your valuable suggestions and feedback here