108-ThiruParamapadham


ThiruParamapadham ( Parathuvam )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 4
ஆண்டாள் திருப்பாவை 1
திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 1
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 1
திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் 1
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி 2
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 1
நம்மாழ்வார் திருவிருத்தம் 3
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 20
Total 36

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.7.9

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய் *

தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா *

உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய் *

கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.6.3

வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசுதே வன்மது ரைமன்னன் * நந்த

கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது *

வானிளம் படியர் வந்துவந் தீண்டி மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப *

தேனள வுசெறி கூந்த லவிழச் சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.9

** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.4.10

** தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடுங் கொடிபோல் *

சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்என் சோதிநம்பீ *

வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும் *

இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே


5   ஆண்டாள் – திருப்பாவை – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் * தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் *

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் * மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் *

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ * ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ *

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று * நாமம் பலவும் நவின்றேலோர் என்பாவாய்


6   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 45

மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேம யங்கிநின்று *

எண்ணுமெண்ண கப்படாய்கொல் என்னமாயைநின்தமர் *

கண்ணுளாய்கொல் சேயைகொல்அ னந்தன்மேல்கி டந்தவெம்

புண்ணியா * புனந்துழாய லங்கலம்பு னிதனே


7   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 95

** ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை *

ஆன்றேன் அமரர்க் கமராமை * ஆன்றேன்

கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு * மேலை

இடநாடு காண இனி


8   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 1

** அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் * விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் *

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் * திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே


9   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 11

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறு

கண்டு * தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய் *

அண்டமா யெண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான *

பண்டமாம் பரம சோதி நின்னையே பரவு வேனே


10   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 68

உணர்வாரா ருன்பெருமை யூழிதோ றூழி *

உணர்வாரா ருன்னுருவந் தன்னை * உணர்வாரார்

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் * நால்வேதப்

பண்ணகத்தாய் நீகிடந்த பால்


11   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 77

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் * நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே *

என்றால் கெடுமாம் இடர்


12   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 61

** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *

இளங்குமரன் றன்விண் ணகர்


13   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 66

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் *

எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் * எரி நீர்வளிவான்

மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்

கண்ணாய் அருவினை யேன் * உயி ராயின காவிகளே


14   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 68

மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும் *

புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி * பொருகடல்சூழ்

நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்

கலந்தார் வரவெதிர் கொண்டு * வன் கொன்றைகள் கார்த்தனவே


15   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 75

உலாகின்ற கெண்டை ஒளியம்பு * எம்ஆவியை ஊடுருவக்

குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர் * குனிசங்கிடறிப்

புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்

நிலாகின்ற வைகுந்தமோ * வையமோ நும்நிலையிடமே


16   நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி – 68

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் *

புல்லென் றழிந் தனகொல் ஏபாவம் * வெல்ல

நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் *

அடியேன துள்ளத் தகம்


17   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.8.4

புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி *

நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர் *

அலமந்துவீய வசுரரைச்செற்றான் *

பலமுந்துசீரில் படிமினோவாதே


18   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.10.5

இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய *

படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி *

சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை *

உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே


19   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.4.1

** மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் *

விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும் *

கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே * என்

பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே


20   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.9.7

வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச் *

செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை *

வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி *

செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ


21   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.2.8

இடையில் லையான் வளர்த்த கிளிகாள் பூவைகள் காள்குயில் காள்!ம யில்காள் *

உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான் *

அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய *

கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே


22   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.3.7

ஆகம்சேர் நரசிங்கமதாகி * ஓர்

ஆகம்வள்ளுகிரால் பிளந்தானுறை *

மாகவைகுந்தம் காண்பதற்கு * என்மனம்

ஏகமெண்ணு மிராப்பகவின்றியே


23   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.5

தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும் *

ஒளிமுகில்காள திருமுழிக்களத்துளையுமொண்சுடர்க்கு *

தெளி விசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும் *

துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே


24   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.8

** திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே *

திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே *

அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே *

ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே


25   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.4

எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப *

களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன் *

கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான் *

தெளிதா கியசேண் விசும்புதரு வானே


26   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.1

** சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக் கின *

ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின *

ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன் *

வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே


27   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.2

நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில் *

பூரண பொற்குடம் பூரித் த துயர்விண்ணில் *

நீரணி கடல்கள்நின் றார்த்தன * நெடுவரைத்

தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே


28   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.3

தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை

பொழிவனர் * பூழியன் றளந்தவன் தமர்முன்னே *

எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள் *

வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே


29   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.4

எதிரெதிரி இமையவர் இருப்பிடம் வகுத்தனர் *

கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர் *

அதிரிகுரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த *

மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே


30   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.5

மாதவன் தமரென்று வாசலில் வானவர் *

போதுமின் எமதிடம் புகுதுக வென்றலும் *

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் *

வேதநல்வாயவர் வேள்ளியுள் மடுத்தே


31   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.6

வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை * காளங்

கள் வலம்புரி கலந் தெங்கும் இசைத்தனர் *

ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று *

வாளொண்கண் மடந்தையர் வாழ்த் தினர் மகிழ்ந்தே


32   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.7

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் *

தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் * தொடுகடல்

கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி *

குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே


33   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.8

குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று *

முடியுடை வானவர் முறைமுறை எதிரிகொள்ள *

கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர் *

வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே


34   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.9

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் *

வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுதென்று *

வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர் *

வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே


35   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.10

விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர் *

பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் *

நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் *

மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே


36   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.9.11

** வந்தவர் எதிரிகொள்ள மாமணி மண்டபத்து *

அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை *

கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபன் * சொல்

சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே