102-Thirukkandam


Thirukkandam ( Kadi Nagar – Devaprayag – Sri Neelamega Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 11
Total 11

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.1

** தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய் *

எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை *

கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும் *

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.2

சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச *

மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு *

நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும் *

கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.3

அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்து * அங்கு

எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை *

சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி *

கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.4

இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை *

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான் *

இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட *

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.5

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும் *

மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு *

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம் *

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.6

தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு *

மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு *

அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட *

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.7

விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி *

மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு *

அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும் *

கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.8

திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய் *

அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு *

நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு * இரண்டு

கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே


9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.9

** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.10

** மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கி * மூன் றெழுத்தை

ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை *

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான் *

கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே


11   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.11

** பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல் *

வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று *

தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு *

கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே