098-ThiruAyodhdhi


Thiru Ayodhdhi ( Ayodhya – Ram Janmabhoomi )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 6
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 4
தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 1
Total 13

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.9.6

முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு * உன்

அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த *

படியில் குணத்துப் பரதநம் பிக்கு * அன்று

அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.9.8

தார்க்குஇளந் தம்பிக்கு அரசீந்து * தண்டகம்

நூற்றவள் சொல்கொண்டு போகி * நுடங்கிடைச்

சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்கு * அவ

ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக் கரசனைப் பாடிப்பற


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.9.10

காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு *

ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும் *

நேரா அவன்தம்பிக் கேநீ ளரசீந்த *

ஆரா வமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.10.4

வாரணிந்த முலைமடவாய் வைதேவீ விண்ணப்பம் *

தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் *

கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில் *

சீரணிந்த தோழமையைக் கொண்டதும்ஓ ரடையாளம்


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.10.8

மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் *

ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட *

அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவைமொழிந்தான் *

இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.9

** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


7   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.6

சுற்றம் எல்லாம் பின் டிதாடரத் தொல் கானம் அடைந்தவனே *

அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே *

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே *

சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ


8   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.7

ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே *

வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே *

காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே *

ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ


9   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 10.1

** அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி *

வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை *

செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *

எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே


10   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 10.8

அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்

றன் * பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி  உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் *

செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள *

எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே


11   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 4

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் *

ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை *

வாட்டிய வரிசிலை வானவ ரேறே மாமுனி வேள்வியைக் காத்து * அவ பிரதம்

ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.3.8

கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்

துவள * வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே *

தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன் *

குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே


13   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.5.1

** கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ *

புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே *

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் *

நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே