093-Thiruvithuvakkodu


Thiruvithuvakkodu ( Sri Uyyavantha Perumal Temple )

Azhwar Paasuram Count
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 10
Total 10

1   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.1

** தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை *

விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே *

அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் * மற்றவள்தன்

அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே


2   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.2

கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும் *

கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல் *

விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா * நீ

கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே


3   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.3

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன் *

பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் *

தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் * தார்வேந்தன்

கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே


4   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.4

வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால் *

மாளாத காதல்நோ யாளன்போல் * மாயத்தால்

மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மா * நீ

ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே


5   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.5

வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே *

எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால் *

எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும் *

வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே


6   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.6

செந்தழலே வந்தழலைச் செய்திடினும் * செங்கமலம்

அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால் *

வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா * உன்

அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே


7   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.7

எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் *

மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல் *

மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்

டம்மா * என் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே


8   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.8

தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி * தொடுகடலே

புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல் *

மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா * உன்

புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே


9   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.9

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்

தன்னையே * தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் *

மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மா *

நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே


10   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 5.10

** விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும் *

மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த *

கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன *

நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே