075-Thiruthankaal


Thiruthankaal ( Sri Nindra Narayana Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 1
Total 5

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.2

** பேரானைக் குறுங்குடியெம் பெருமானை * திருதண்கால்

ஊரானைக் கரம்பனூர் உத்தமனை * முத்திலங்கு

காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும் *

அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே


2   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 17

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று *

செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து * ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு *

நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே


3   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 71

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் *

** ஆராமம் சூழ்ந்த வரங்கம்


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 120

மன்னும் கடன்மல்லை மாயவனை * வானவர்தம்

சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை


5   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 70

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளும் தண்பொருப்பு வேலை * தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே *

ஏவல்ல எந்தைக் கிடம்