073-Thiruppulingudi


Thiruppulingudi ( Sri Kaaichina Vendha Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 12
Total 12

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.3.5

கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும் *

மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான் *

அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் *

இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.1

** பண்டைநாளாலேநின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்

கொண்டு * நின்கோயில்சீய்த்துப்பல்டிகால் குடிகுடி வழிவந்த நாட்செய்யும் *

தொண்டரொர்க்கருளிச்சோ திவாய்திறந்து உன் தாமரைக் கண்களால்நோக்காய் *

தொண்டிரைப்பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடா தானே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.2

குடிக்கிடந்தாக்கஞ்செய்து நின்தீர்த்தபடிமைக்குற்றேவல் செய்து * உன் பொன்

னடிக்சுடவாதே வழிவருகின்ற அடியரோர்க்கருளி * நீயொருநாள்

படிக்களவாகநிமிர்த்த நின்பாதபங்கயமேதலைக்கணியாய் *

கொடிக்கொள்பொன்மதிள் சூழ்குளிர்வயற்சோலைத் திருப்புளிங்குடிக்கிடந்தானே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.3

கிடந்தநாள் கிடந்தாயேத்தனை காலங்கிடத்தி உன்திருவு டம்பசைய *

தொடர்ந்து குற்றவேல் செய்து தொல்லடிமை வழி வருந்தொண்ட ரோர்கருளி *

தடங்கொள் தாமரைக் கண்விழித்து நீயேழுந்துன் தாமரை மங்கையும் நீயும் *

இடங்கொள் மூவுலகுந் தொழவிருந் தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.4

புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று *

தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி *

நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப *

புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.5

பவளம்போல்கனிவாய் சிவப்பநீ காணவந்து நின்பன்னிலாமுத்தம் *

தவழ்கதிர்முறுவல்செய்து நின்திருக்கண்தாமரை தயங்கறின்றருளாய் *

பவளநன்படர்க்கீழ்ச்சங்குறைபொருநல் தண் திருப்புளிங்குடிக்கிடந்தாய் *

கவளமாகளிற்றினிடர்கெடத்தடத்துக் காய்சினப்பறையூர்ந்தானே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.6

காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்காரர் முகில் போல் *

மாசினமாலிமாலிமானென்று அங்கவர்படக் கனன்று முன்னின்ற *

காய்சினவேந்தே கதிர்முடியாநே  கலிவயல்திருப்புளிங்குடியாய் *

காய்சின வாழிசங்குவாள் வில் தண்டேந்தியெம்மிடர்கடிவானே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.7

எம்மிடர் கடிந்திங்கென்னையாள்வேனே இமையவர் தமக்குமாங்கனையாய் *

செம்மடல்மருந்தாமரைப்பழனத் தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய் *

நம்முடையவடியர்கவ்வைகண்டுகேந்து நாங்களித்துளஉலங்கூர *

இம்மடவுலகர்காண நீயொருநாள்  இருந்திடாயெங்கள் கண்முகப்பே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.8

எங்கள் கண் முகப்பேயுலர்களெல்லாம் இணையடிதொழு தேழுநிறைஞ்சி *

தங்களன்பாரத்தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்தபூசிப்ப *

திங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடியாய்  திருவைருந் தத்துள்ளாய்தேவா *

இங்கண்மா ஞாலத்திதனுளுமொருநாள் இருந்திடாய் வீற்றிடங்கொண்டே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.9

வீற்றிடங்கொண்டுவியன் கொள்மாஞாலத்து இதனுளுமிருந்திடாய் * அடியோம்

போற்றியோவாதே கண்ணிணைகுளிரப் பூதுமலராகத்தைப்பருக *

சேற்றிளவாளைசெந்நூடுகளும் செழும்பணைத்திருப்புளிங்குடியாய் *

கூற்றமாயசுரர் குலமுதலரிந்த கொடுவினைப்படைகள் வல்லனே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.10

கொடுவினைப்படைகள்வல்லையாய் அமரக்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய் *

கடுவினைநஞ்சேயென்னுடையமுதே கலிவயல்திருப்ஙபளிங்குடியார் *

வடிவிணையில்லாமலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை *

கொடுவினையேணும்பிடிக்கந்யொருநாள் கூவுதல் வருதல்செய்யாயே


12   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.11

** கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் கடைந்தவன்தன்னை *

மேலிநன்கமர்ந்த வியன்புனற்பொருநல் வழுதிநாடன் சடகோபன் *

நாவியல்பாடலாயிரத்துள்ளும் இவையுமோர்பத்தும் வல்லார்கள் *

ஓவுதலின்றியுலகம் மூன்றளந் தான் அடியிணையுள்ளத் தோர்வாரே