068-Thirukkoloor


Thirukkoloor ( Sri Vaitha Maanitha Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 12
Total 12

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.1

** உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்

கண்ணன் * எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி *

மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி *

திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.2

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் * அவனுடைய

பேரும் தார்களுமே பிதற்ற, கற்பு வான் இடறி *

சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே *

போரும்கொல் உரையீர் கொடியேன் கொடி-பூவைகளே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.3

பூவைபைங்கிளிகள் பந்துதூதைபூம்பட்டில்கள் *

யாவையும்திருமால் திருநாமங்களே கூவியெழும் * என்

பாவைபோயினித் தண்பழனத்திருக்கோளூர்க்கே *

கோவைவாய்துடிப்ப மழைக்கண்ணொடென் செய்யுங்கொலோ


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.4

கொல்லை யென்பர்கொ லோகுணம் மிக்கனள் என்பர்கொலோ *

சில்லை வாய்ப்பெண் டுகளயற் சேரியுள் ளாருமெல்லே *

செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோ ளூர்க்கே *

மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.5

மேவி நைந்து நைந்துவிளை யாடலுறா ளென்சிறுத்

தேவிபோய் * இனித்தன் திருமால் திருக்கோ ளூரில் *

பூவியல் பொழிலும் தடமும் அவன்கோ யிலுங்கண்டு *

ஆவியுள் குளிர எங்ஙனே யுகக்குங்கொல் இன்றே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.6

இன்றெனக் குதவா தகன்ற இளமான் இனிப்போய் *

தென்திசைத் திலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று *

தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு *

நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.7

மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய் *

அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய் *

செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே *

ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.8

ஒசிந்த நுண்ணிடை மேல்கையை வைத்து நொந்துநொந்து *

கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண நீர்த்துளும்பச் செல்லுங்கொல் *

ஒசிந்த வொண்மல ராள்கொழுநன் திருக்கோ ளூர்க்கே *

கசிந்த நெஞ்சின ளாயெம்மை நீத்தஎ ம் காரிகையே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.9

காரியம் நல்லன களவை காணிலென் கண்ணனுக்கென்று *

ஈரியா யிருப்பாளி தெல்லாம் கிடக்க இனிப்போய் *

சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளூர்க்கே *

நேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் நினைத்திலளே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.10

நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய் *

அனைத்து லகுமு டைய அரவிந்த லோசனனை *

தினைத்தனை யும்விடா ளவன்சேர் திருக்கோ ளூர்க்கே *

மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.7.11

** வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி *

கொத்த லர்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொன்ன *

பத்து நூறு ளிப்பத் தவன்சேர் திருக்கோளூர்க்கே *

சித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே


12   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.3.5

கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும் *

மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான் *

அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் *

இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே