065-Thirukkurungudi


Thirukkurungudi ( Sri Nindra Nambi Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
1

திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
23

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

நம்மாழ்வார் திருவாய்மொழி
13

Total
40

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.5.8

** உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும் *

கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி *

மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே *

என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே

  

 

  

 

  


2   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 62

** கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம் *

புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய் *

திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும் *

இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பது உன்னையே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.8

ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு * ஐவர்

கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா *

பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து * என்

நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.2

** பேரானைக் குறுங்குடியெம் பெருமானை * திருதண்கால்

ஊரானைக் கரம்பனூர் உத்தமனை * முத்திலங்கு

காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும் *

ஆராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.3

மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும் *

ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன் *

கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்

தேனே * வருபுனல்சூழ் திருவிண் ணகரானே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.1

** தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்

துவள * என் னெஞ்சகம் சோரவீரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன் *

இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன *

குவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.2

தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே *

ஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் * உறங்கும்

பேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார் *

கோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.3

காலையும் மாலையொத் துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும் *

போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி *

மாலவன் மாமணி வண்ணன்மாயம் மற்று முளவவை வந்திடாமுன் * கோல

மயில்பயி லும்புறவில் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.4

கருமணி பூண்டுவெண் ணாகணைந்து காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும் *

ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள ஓரிர வுமுறங் காதிருப்பேன் *

பெருமணி வானவ ருச்சிவைத்த பேரரு ளாளன் பெருமைபேசி *

குருமணி நீர்கொழிக் கும்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.5

திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு *

கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற கோல இளம்பிறை யோடுகூடி *

பண்டைய வல்லவிவை நமக்குப் பாவியே னாவியை வாட்டஞ்செய்யும் *

கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

  

 

  

 

  


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.6

எல்லியும் நன்பக லுமிருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார் *

நல்லர் அவர்திறம் நாமறியோம் நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை *

வல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நாம்மறவோம் *

கொல்லை வளரிள முல்லைபுல்கு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.7

செங்க ணெடிய கரியமேனித் தேவ ரொருவரிங் கேபுகுந்து * என்

அங்கம் மெலிய வளைகழல ஆதுகொ லோ என்று சொன்னபின்னை *

ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ டாடு மதனை யறியமாட்டேன் *

கொங்கலர் தண்பணை சூழ்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

  

 

  

 

  


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.8

கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து * என்

ஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு *

ஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன் *

கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

  

 

  

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.9

சோத்தென நின்று தொழவிரங்கான் தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும் *

போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் போயின வூரறி யேன் * என்கொங்கை

மூத்திடு கின்றன மற்றவன்றன் மொய்யக லம் அணை யாதுவாளா *

கூத்த னிமையவர் கோன்விரும்பும் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

  

 

  

 

  


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.5.10

** செற்றவன் தென்னிலங் கைமலங்கத் தேவர்பி ரான்திரு மாமகளைப்

பெற்றும் * என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரரு ளாளன் பெருமைபேசக்

கற்றவன் * காமரு சீர்க்கலியன் கண்ணகத் தும்மனத் துமகலாக்

கொற்றவன் * முற்றுல காளிநின்ற குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

  

 

  

 

  


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.1

** அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர் *

பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் *

தக்க மரத்தின் தாழ்சினையேறி * தாய்வாயில்

கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே

  

 

  

 

  


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.2

துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள் *

பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும் *

செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும் *

கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே

  

 

  

 

  


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.3

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் *

கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர் *

ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி *

கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே

  

 

  

 

  


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.4

சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று * அரக்கன்

உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும் *

இரவும் பகலும் ஈன்தேன் முரல * மன்றெல்லாம்

குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே

  

 

  

 

  


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.5

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்

ஐவர்க் காய் * அன் றமரில் உய்த்தான் ஊர்போலும் *

மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான் *

கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே

  

 

  

 

  


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.6

தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி *

தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள் *

மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் * வானில்

கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே

  

 

  

 

  


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.7

வல்லிச் சிறுநுண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற *

அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள் *

சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான் *

கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே

  

 

  

 

  


23   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.8

நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள் *

ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள் *

தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் * கூர்வாய்

நாரை பேடையொ டாடும் குறுங்குடியே

  

 

  

 

  


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.9

நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி *

சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள் *

என்றும் மிரவும் பகலும் வஜீவண் டிசைபாட *

குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே

  

 

  

 

  


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.6.10

** சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம் *

கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல் *

கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை *

நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே

  

 

  

 

  


26   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 14

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *

அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *

விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே

  

 

  

 

  


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 114

பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை *

தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை

  

 

  
 

 

  


28   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 1.10.9

** நம்பியைத் தென் குறுங்குடிநின்ற * அச்

செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை *

உம்பர்வானவ ராதியஞ்சோதியை *

எம்பிரானையென் சொல்லிமறப்பனோ

  

 

  

 

  


29   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.9.2

உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன்

செல்வத்தை * வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென் *

குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே *

உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே

  

 

  

 

  


30   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.1

** எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர் *

நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும் *

செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே

  

 

  

 

  


31   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.2

என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர் என்னை முனியாதே *

தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

மின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திருமறுவும் *

மன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே

  

 

  

 

  


32   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.3

நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர் *

குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும் *

நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே

  

 

  

 

  


33   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.4

நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று அன்னையரும் முனிதிர் *

தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன்முடி யும்வடிவும் *

பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே

  

 

  

 

  


34   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.5

பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர் *

தக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின் *

தொக்கசோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் *

தக்கதாமரைக் கண்ணும் பாவியே னாவியின் மேலனவே

  

 

  

 

  


35   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.6

மேலும் வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள் *

சோலைசூழ் தண்திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

கோலநீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும் *

நீலமேனியும் நான்கு தோளுமென் நெஞ்சம் நிறைந்தனவே

  

 

  

 

  


36   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.7

நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள் *

சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின் *

நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும் *

நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே

  

 

  

 

  


37   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.8

கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர் *

மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

செய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும் *

மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே

  

 

  

 

  


38   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.9

முன்னின் றாயென்று தோழிமார்களும் அன்னைய ரும்முனிதிர் *

மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

சென்னி நீண்முடி யாதியாய உலப்பி லணிகலத்தன் *

கன்னல் பாலமு தாகிவந்தென் நெஞ்சம் கழியானே

  

 

  

 

  


39   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.10

கழீயமிக்கதோர் காதல ளிவளென் றன்னை காணக்கொடாள் *

வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *

குழுமித் தேவர் குழாங்கள்தொழச் சோதிவெள் ளத்தினுள்ளே *

எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும் ஆர்க்கு மறிவரிதே

  

 

  

 

  


40   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.5.11

** அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி *

நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன *

குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடிய தன்மேல் *

அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே