049-Thiruvekka


Thiruvekka ( Sri Yathokthakari Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 2
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 3
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி 1
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 4
நம்மாழ்வார் திருவிருத்தம் 1
Total 15

1   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 63

நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள் *

சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே *

குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும் *

நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே


2   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 64

நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து *

அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம் *

அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன் *

நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே


3   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 36

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *

நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்

தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *

அணைப்பார் கருத் தனா வான்


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.7

கூந்த லார்மகிழ் கோவல னாய் * வெண்ணெய்

மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய் *

பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய *

வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே


5   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 8

** நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய் * நிறைந்த கச்சி

ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் * உலக மேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் * பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே


6   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 13

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்றும் *

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே என்றும் *

அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும் *

சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே


7   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 14

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *

அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *

விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே


8   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 70

** மதிட் கச்சி ஊரகமே பேரகமே *

பேரா மருதிருத்தான் வெள்ள றையே வெஃகாவே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 127

மன்னிய பாடகத்தெம் மைந்தனை * வெஃகாவில்

உன்னிய யோகத் துறக்கத்தை


10   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 77

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் * நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே *

என்றால் கெடுமாம் இடர்


11   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 26

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும் *

நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் * உறைந்ததுவும்

வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *

தாம்கடவார் தண்டுழா யார்


12   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 62

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு


13   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 64

இசைந்த அரவமும் வெற்பும் கடலும் *

பசைந்தங் கமுது படுப்ப * அசைந்து

கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில் *

கிடந்திருந்து நின்றதுவும் அங்கு


14   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 76

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் * ஐந்து

நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா * விருப்புடைய

வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால் *

அஃகாவே தீவினைகள் ஆய்ந்து


15   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 26

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட *

வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை * கடந்தபொன்னே

கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்

தேனிளஞ் சோலையப் பாலது * எப் பாலைக்கும் சேமத்ததே