048-ThiruKacchi


Thiru Kacchi ( Kanchipuram – Sri Varadharajar Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 2
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 2
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 1
Total 7

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.4

கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் *

எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான் * இலங்கைக்கோன்

வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு

நல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே


2   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 19

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்

உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே


3   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 9

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய் பேராய் *

கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்

பங்கத்தாய் * பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா *

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே


4   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 15

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும் *

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும் *

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு *

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே


5   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 95

என்னெஞ்ச மேயான்என் சென்னியான் * தானவனை

வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன் * முன்னம்சேய்

ஊழியா னூழி பெயர்த்தான் * உலகேத்தும்

ஆழியான் அத்தியூ ரான்


6   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 96

** அத்தியூ ரான்புள்ளை யூர்வான் * அணிமணியின்

துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான் * மூத்தீ

மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும் *

இறையாவான் எங்கள் பிரான்


7   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 26

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும் *

நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் * உறைந்ததுவும்

வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *

தாம்கடவார் தண்டுழா யார்