045-ThiruIdaVenthai


Thiru Ida Venthai ( Tiruvedanthai – Sri Nithya Kalyana Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 11
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 13

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.4

** பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர் *

கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன் *

ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான் *

தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.1

** திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த

அவளும் * நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால் *

குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த

இவளை * உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.2

துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள் *

குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள் *

வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள் *

இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.3

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம் *

போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும் *

மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா * என்தன்

ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.4

ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும் *

ஆழியும் புலம்பும் அன்றிலு முறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம் *

தோழியோ என்னும் துணைமுலை யரக்கும் சொல்லுமி னென்செய்கேன் என்னும் *

ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.5

ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள் உருகும்நின் திருவுரு நினைந்து *

காதன்மை பெரிது கையற வுடையள் கயல்நெடுங் கண்துயில் மறந்தாள் *

பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல் *

ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.6

தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை *

வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும் *

மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த *

என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.7

உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால் *

வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை மாயனே என்றுவாய் வெருவும் *

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோ டவலம்சேர்ந் திருந்த *

இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.8

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும் *

புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் *

குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி *

இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.9

பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொருகயல் கண்துயில் மறந்தாள் *

அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ ணங்கினுக் குற்றநோ யறியேன் *

மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி வீங்கிய வனமுலை யாளுக்கு *

என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.10

** அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆயஎம் மாயனே அருளாய் *

என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை *

மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள் *

பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே


12   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 73

காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை *

ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 119

தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை *

என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை