041-Thiruvaheendrapuram


Thiruvaheendrapuram ( Sri Deyva Nayaga Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.1

** இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி *

கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல்

அருந்தி * இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே *

செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.2

மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன் *

பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல் *

பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து *

தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.3

வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன் * அடியவர்க்கு

மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல் * மொய்கொள்

மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட * செய்ய

தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.4

மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா *

கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம் * மிடைந்து

சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல் *

சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.5

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து * ஆயர்

பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ் * வேங்கை

கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி *

தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.6

கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும் *

கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும் *

வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ *

தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.7

மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை

மன்னன் * நீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல் *

அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர *

செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.8

விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு *

நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார் *

வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி *

திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.9

வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய் மணித்தேர்க் *

கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல் *

கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல் *

சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.1.10

** மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை *

தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து *

மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த *

பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே