038-ThiruManikkoodam


Thiru Manikkoodam ( Sri Varadharaja Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.1

** தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி * மன்னு

காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை *

பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட * எங்கும்

தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.2

கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து * இலங்கை

வவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை *

கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த *

தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.3

மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து * வன்தாள்

சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை *

நாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த * வண்கைத்

தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.4

தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி *

பூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை *

மாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய * வாழைத்

தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.5

கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து * தன்மேல்

வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை *

பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத *

திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.6

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும் *

அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை *

ஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட *

திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.7

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு *

நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை *

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு * எங்கும்

தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.8

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும் *

பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை *

பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய *

செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.9

பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும் *

கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை *

மூவரி லெங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு *

தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.5.10

** திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை *

மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார் *

பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு * பின்னும்

வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே