026-ThiruNaagai


Thiru Naagai ( Sri Neelamega Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.1

** பொன்னிவர் மேனி மரக தத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்

மின் * இவர் வாயில்நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர்தோழீ *

என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் *

அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.2

தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த *

சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி *

பாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி *

ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.3

வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம் *

தாயின நாயக ராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு *

சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி *

ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.4

வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி *

நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் நாகரி கர்பெரி துமிளையர் *

செம்பவ ளமிவர் வாயின் வண்ணம் தேவ ரிவர துருவம்சொல்லில் *

அம்பவ ளத்திர ளேயு மொப்பர் அச்சோ ஒருவர் அழகியவா


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.5

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன *

பாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் *

வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்மாகடல் போன்றுளர் கையில்வெய்ய *

ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.6

வெஞ்சின வேழம் மருப்பொ சித்த வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை *

தஞ்சுடை யாளர்கொல் யான றியேன் தாமரைக் கண்க ளிருந்தவாறு *

கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த காளையா ரவர்கண் டார்வணங்கும் *

அஞ்சன மாமலை யேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.7

பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும்பேரரு ளாளர்கொல் யானறியேன் *

பணியுமென் நெஞ்சமி  தென்கொல் தோழீ பண்டிவர் தம்மையும் கண்டறியோம் *

அணிகெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கய மேனிவானத்து *

அணிகெழு மாமுகி லேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.8

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலைம ணாளர்வந்து * என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலை யார்கொல் நினைக்கமாட்டேன் *

மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த மாமுகில் போன்றுளர் வந்துகாணீர் *

அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் அச்சோவொரு வரழகியவா


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.9

எண்டிசை யுமெறி நீர்க்க டலும் ஏழுல குமுட னேவிழுங்கி *

மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும் மாயர்கொல் மாயம் அறியமாட்டேன் *

கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும் *

அண்டத் தமரர் பணிய நின்றார் அச்சோவொருவரழகியவா


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.10

** அன்னமும் கேழலும் மீனு மாய ஆதியை நாகை யழகியாரை *

கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க்கலி கன்றி * குன்றா

இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார் *

மன்னவ ராயுல காண்டு மீண்டும் வானவ ராய்மகிழ் வெய்துவரே