019-Thirukkannamangai


Thirukkannamangai ( Sri Bhaktavatsala Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
12

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

Total
14

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.1

** பெரும்பு றக்கட லையட லேற்றினைப் பெண்ணை யாணை * எண்ணில் முனிவர்க்கருள்

தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் பத்த ராவியை நித்திலத் தொத்தினை *

அரும்பி னையல ரையடி யேன்மனத் தாசை யை அமு தம்பொதி யின்சுவைக் *

கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.2

மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும் மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை *

மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை *

நென்ன லைப்பக லையிற்றை நாளினை நாளை யாய்வரும் திங்களை யாண்டினை *

கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.3

எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை வாச வார்குழ லாள்மலை மங்கைதன்

பங்க னை * பங்கில் வைத்துகந் தான்றன்னைப் பான்மை யைப்பனி மாமதி யம்தவழ் *

மங்கு லைச் சுட ரைவட மாமலை உச்சியை,நச்சி நாம்வணங் கப்படும்

கங்குலை * பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.4

பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை *

மாய னைமதிள் கோவலி டைகழி மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் ஈசனை *

இலங் கும்சுடர்ச் சோதியை எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை *

காசி னைமணி யைச்சென்று நாடிக்  கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.5

** ஏற்றி னையிம யத்துளெம் மீசனை இம்மை யைமறு மைக்கு மருந்தினை

ஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும் ஐய னைக்கையி லாழியொன் றேந்திய

கூற்றினை * குரு மாமணிக் குன்றினை நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை *

காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.6

துப்ப னைத்துரங் கம்படச் சீறிய தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்

செப்பி னை * திரு மங்கைம ணாளனைத் தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி

ஒப்னை * உல கேழினை யூழியை ஆழி யேந்திய கையனை அந்தணர்

கற்பினை * கழு நீர்மல ரும்வயல் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.7

திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய

விருத்தனை * விளங் கும்சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய

அருத்தனை * அரி யைப்பரி கீறிய அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற

கருத்தனை * களி வண்டறை யும்பொழில் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.8

வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக் கன்று வீசிய ஈசனை * பேய்மகள்

துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய

நஞ்சினை * அமு தத்தினை நாதனை நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை *

கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.9

பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற

விண்ணினை * விளங் கும்சுடர்ச் சோதியை வேள்வி யைவிளக் கினொளி தன்னை *

மண்ணி னைமலை யையலை நீரினை மாலை மாமதி யைமறை யோர்தங்கள்

கண்ணினை * கண்க ளாரள வும்நின்று கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.10

** கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன்என்று  காத லால்கலி கன்றியு ரைசெய்த *

வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ் *

விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர் மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய

கண்ண * நின்றனக் கும்குறிப் பாகில் கற்க லாம்கவி யின்பொருள் தானே

  

 

  

 

  


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.1

** ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள் *

வருநல் தொல்கதி யாகிய மைந்தனை *

நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய் *

கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.6.7

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் *

உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட *

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூடி * அவனையுள்ளத்

தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லா மினியவாறே

  

 

  

 

  


13   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 72

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் *

** ஆராமம் சூழ்ந்த வரங்கம் * கணமங்கை

காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்

  

 

  
 

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 115

என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை *

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை