012-ThiruppullamBoothankudi


Thiruppullam Boothankudi ( Sri Valvil Ramar Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
10

Total
10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.1

** அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான் *

குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம் *

நறிய மலர்மேல் சுரும்பார்க்க  எழிலார் மஞ்ஞை நடமாட *

பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.2

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து *

பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் *

பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய் *

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.3

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து *

மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் *

காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும் *

பூவார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.4

வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன் *

வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம் *

கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் *

பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.5

மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர் *

நெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம் *

செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும் *

பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.6

மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா *

மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம் *

மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட *

புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.7

குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து *

சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் *

குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் *

புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.8

கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி *

இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம் *

மறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் *

பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.9

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள் *

அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் *

மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் *

பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.1.10

** கற்றா மறித்து காளியன்றன் சென்னி நடுங்க நடம்பயின்ற *

பொற்றா மரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல் *

கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி *

சொல்தானீரைந் திவைபாடச் சோர நில்லா துயர்தாமே