009-Thiruvelliyankudi


Thiruvelliyankudi ( Sri Kola Valvilli Ramar Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
10

Total
10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.1

** ஆய்ச்சியரழைப்பவெண்ணெயுண்டடொருகால் ஆலிலைவளர்ந்தவெம்பெருமான் *

பேய்ச்சியழலையுண்டிணைமருதிறுத்துப் பெருநிலமளந்தவன்கோயில் *

காய்த்தநீள் கழகுங்கதலியுந்தெங்கும் எங்குமாம் பொழில்களினடுவே *

வாய்த்தநீர்பாயும்மண்ணியின் தென்பால் திருவெள்ளியங்குடியதுவே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.2

ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டு அரக்கர்தம் சிரங்களை யுருட்டி *

கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில் *

பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி *

தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.3

கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து * அவன்றன்

படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில் *

படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய் *

அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.4

கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன் *

பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் *

துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால் *

செறிமணி மாடக் கொடிகதி ரணவும்  திருவெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.5

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து * ஒருகால்

தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில் *

ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென் றெண்ணி *

சீர்மலி பொய்கை சென்றணை கின்ற  திருவெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.6

காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை *

கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்கோயில் *

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி *

சேற்றிடைக் கயல்க ளு ள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.7

ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு *

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் *

அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப *

வெள்ளியார் வணங்க விரைந்தரு ள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.8

முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை * அன் றரியாய்

மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் *

படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால் *

விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.9

குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த *

அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில் *

கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய *

வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும்  வயல்வெள்ளி யங்குடி யதுவே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.10

** பண்டுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு *

தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை *

வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள் *

கொண்டிவை பாடும் தவமுடையார்கள்  ஆள்வரிக் குரைகட லுலகே