Thirupalliyezhuchi-Vishnu-01-Maargazhi


கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்

கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்

மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்

வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்

அரங்கத்தம்மா பள்ளியெழுந்து அருளாயே


    

Please leave your valuable suggestions and feedback here