Thiruvarangathamudhanar_Thaniyan


திருவரங்கத்தமுதனார் – தனியன்

Azhwar Paasuram Count Media
திருவரங்கத்தமுதனார் தனியன் 4
Total 4

1   திருவரங்கத்தமுதனார் தனியன் – 1 – வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தது

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் *

பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் * என்னுடைய

சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு *

என்னுக் கடவுடையேன் யான்

   

2   திருவரங்கத்தமுதனார் தனியன் – 2 – வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தது

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதின்றி நண்ணினர்பால் *

சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல் *

உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும்அன்பால் *

இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே

   

3   திருவரங்கத்தமுதனார் தனியன் – 3 – வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தது

இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திருநாமத்தால் *

முனி தந்த நூற்றெட்டு சாவித்திரி என்னும் நுண்பொருளை *

கனி தந்த செஞ்சொற் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான் *

புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே

   

4   திருவரங்கத்தமுதனார் தனியன் – 4 – அபியுக்தர் அருளிச்செய்தது

சொல்லின் தொகைகொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும் *

நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லாம் என்றன் நாவினுள்ளே *

அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்

வெல்லும் பரம * இராமானுசா இதுஎன் விண்ணப்பமே