101-ThiruvadhariAshramam


Thiruvadhari Ashramam ( Badrinath – Sri Badri Narayana Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 20
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
Total 22

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.9

** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.1

** முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து *

இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன் *

பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு * உயிரை

வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.2

முதுகுபற்றிக்கைத்த லத்தால்  முன்னொருகோலூன்றி *

விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி *

இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன் *

மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.3

உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி *

நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன் *

அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி *

வெறிகொள்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.4

பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி *

தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன் *

காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான் *

வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.5

பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம் *

உண்டவாறும் வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி *

தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன் *

வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.6

எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம் *

பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன் *

அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த *

மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.7

பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை

யொப்ப * ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று *

செப்புநேர்மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம் *

வைப்பும்நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.8

ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர் * உள்ளம்

கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால் *

நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில் *

வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.9

புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி *

கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன் *

அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி *

வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.3.10

** வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை *

கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை *

கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில் *

அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.1

** ஏனமுனாகியிருநிலமிடந்து அன்றிணையடியிமையவர்வணங்க *

தானவனாகம்தரணியில்புரளத் தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன் *

தேனமர்சோலைக்கற்பகம்பயந்த தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து *

வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.2

கானிடையுருவைச்சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன் *

ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன் *

தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட * பெருகு

வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.3

இலங்கையும்கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும் * அரக்கர்

குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற *

விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடியெனவிரிந்து *

வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.4

துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே தொழுதெழுதொண்டர்கள்தமக்கு *

பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும் பேரருளாளனெம்பெருமான் *

அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து *

அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.5

பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட * பெற்ற

தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன் *

சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த  செம்பொன்செய்விலங்கலிலிலங்கு *

வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.6

தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து *

பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான் *

காரணந்தன்னால்கடும்புனல்கயத்த கருவரைபிளவெழக்குத்தி *

வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.7

வெந்திறல்களிறும்வேலைவாயமுதும் விண்ணொடுவிண்ணவர்க்கரசும் *

இந்திரற்கருளியெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான் *

அந்தரத்தமரரடியிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி *

மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.8

மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன் *

ஊன்முனிந்தவனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து * அயனரனைத்

தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன் * தவம்புரிந்துயர்ந்த

மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.9

கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும் *

உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான் *

அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர * பெருகு

மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.4.10

** வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை *

கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல் *

வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி *

இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே


22   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 74

சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் *

பாரோர் புகழும் வதரி வடமதுரை