095-ThiruvaaranVilai


Thiruvaaran Vilai ( Sri Kuralappa Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.1

** இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை *

இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான் *

அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை *

அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.2

ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும் * ஈரடியே

ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும் *

மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை *

மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.3

கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை *

ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும் *

பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ் *

நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.4

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற *

வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை *

வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த *

வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.5

மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க *

பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் *

மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை *

உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.6

ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர் *

அன்றங் கமர்வென் றுருப்பி ணிநங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான் *

என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்ப வுள்ளேயிருக் கின்றபிரான் *

நின்ற அணிதிரு வாறன் விளை யென்னும் நீணக ரமதுவே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.7

நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை *

நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன் *

வாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து *

வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.8

அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய் *

நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் *

சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை *

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.9

தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால் *

நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று *

யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை *

மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.10

சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும் *

சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை *

சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும் *

சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.11

** தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி *

தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன *

தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை * தேவர்வைகல்

தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே