082-Thirumeyyam


Thirumeyyam ( Sri Sathyagiri Natha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 7
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 9

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.8

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை *

தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி *

என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட

கண்ணானை * கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.9

நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகிலும் * என்

முலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே *

சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய

மலையாளா * நீயாள வளையாள மாட்டோமே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.7

கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி

விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை *

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.3

** அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்

வெருவினாள் * மெய்யம் வினவி யிருக்கின்றாள் *

பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்

உருகினாள் * உள்மெலிந் தாள்இது வென்கொலோ


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.3

வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம் *

தாயின நாயக ராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு *

சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி *

ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.5

சுடலை யில்சுடு நீறன் அமர்ந்தது * ஓர்

நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு * என்

உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண் *

விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.7.5

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் *

கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட

மெய்யானை * மெய்ய மலையானைச் சங்கேந்தும்

கையானை * கைதொழா கையல்ல கண்டாமே


8   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 19

** பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்

உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 126

கோட்டியூர் அன்ன வுருவில் அரியை * திருமெய்யத்து

இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை