067-Thirukkurugoor


Thirukkurugoor ( Azhwar Thirunagari – Sri Aadhinatha Swamy Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.1

** ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா

அன்று * நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான் *

குன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள் *

நின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.2

நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான் *

வீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில் *

மாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப் *

பாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்பரந்தே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.3

பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக் *

கரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர் *

சிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள் *

பரன்திற மன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.4

பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்

நாயகனவனே * கபாலநன் மோக்கத்துக்கண்டுகொண்மின் *

தேசமாமதிள்சூர்ந்தழகாய திருக்குருகூரதனுள் *

ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதிலிங்கியர்க்கே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.5

** இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும் *

வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான் *

மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள் *

பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லைபோற்றுமினே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.6

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு * உம்மையின்னே

தேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே *

சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள் *

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந் தறிந் தோடுமினே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.7

ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம் *

பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர் *

கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள் *

ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.8

புக்கு அடி மையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை *

நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது நாராயணனருளே *

கொக்கலர் தடந்தாழை வேலித் திருக்குருகூரதனுள் *

மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.9

விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும் தன்பால் *

அளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும் *

வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை *

உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.10

உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால் *

மறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே *

செறுவில் செந்நெல் கரும்பொ டோங்கு திருக்குரு கூரதனுள் *

குறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 4.10.11

** ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான் *

நாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் *

வேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார் *

மீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே