064-ThiruNindravoor


Thiru Nindravoor ( Sri Bhatavatsala Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 2
Total 2

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.2

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி

மாண்டு * அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை * கணங்களேத்தும்

நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை *

காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.5

** ஏற்றி னையிம யத்துளெம் மீசனை இம்மை யைமறு மைக்கு மருந்தினை *

ஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும் ஐய னைக்கையி லாழியொன் றேந்திய

கூற்றி னை * குரு மாமணிக் குன்றினை நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை *

காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே