057-ThiruPaadagam


Thiru Paadagam ( Sri Pandava Thoodhar Temple )

Azhwar Paasuram Count
திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 2
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 1
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 1
Total 6

1   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 63

நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள் *

சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே *

குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும் *

நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே


2   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 64

நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து *

அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம் *

அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன் *

நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.4

கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் *

எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான் * இலங்கைக்கோன்

வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு

நல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 127

மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை *

மன்னிய பாடகத்தெம் மைந்தனை


5   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 94

உற்று வணங்கித் தொழுமின் * உலகேழும்

முற்றும் விழுங்கும் முகில்வண்ணம் * பற்றிப்

பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்

இருந்தானை * ஏத்துமென் நெஞ்சு


6   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 30

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் *

நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு * வாய்ந்த

மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி *

இறைபாடி யாய இவை