043-ThiruVellikeni


Thiru Vellikeni ( Sri Parthasarathy Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 1
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 1
Total 12

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.1

** விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ *

செற்றவன் றன்னை புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை *

பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை *

சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.2

** வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும் *

கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும் *

ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா

மாதர்கள் வாழும் * மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.3

வஞ்சனை செய்யத் தாயுரு வாகி வந்தபே யலறிமண் சேர *

நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை *

விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து துதிசெய்யப் பெண்ணுரு வாகி *

அஞ்சுவை யமுத மன்றளித் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.4

இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த எழில்விழ வில்பழ நடைசெய் *

மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து * ஆயர்

அந்தமோ டினவா நிரைதள ராமல் எம்பெரு மானரு ளென்ன *

அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.5

இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன் *

தந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்

வன்துணை * பஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும் என்துணை *

எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.6

அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று *

எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன *

சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப *

இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.7

** பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும் *

இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை *

குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால *

இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.8

** பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம் *

ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி *

பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய் *

தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.9

** மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த *

கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ *

ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை *

தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.3.10

** மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும்மண் டபமும் *

தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை *

கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி *

சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே


11   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 16

** வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம் *

அந்தி விளக்கும் அணிவிளக் காம் * எந்தை

ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன் *

திருவல்லிக் கேணியான் சென்று


12   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 35

** தாளால் உலகம் அளந்த அசைவேகொல் *

வாளா கிடந்தருளும் வாய்திறவான் * நீளோதம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான் *

ஐந்தலைவாய் நாகத் தணை