015-Thirukkoodaloor


Thirukkoodaloor ( Sri Aaduthurai Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
10

Total
10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.1

** தாம்தம் பெருமை யறியார் * தூது

வேந்தர்க் காய வேந்த ரூர்போல் *

காந்தள் விரல்மென் கலைநன் மடவார் *

கூந்தல் கமழும் கூட லூரே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.2

செறும்திண் திமிலே றுடைய * பின்னை

பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல் *

நறுந்தண் தீம்தே னுண்ட வண்டு *

குறிஞ்சி பாடும் கூட லூரே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.3

பிள்ளை யுருவாய்த் தயிருண்டு * அடியேன்

உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல் *

கள்ள நாரை வயலுள் * கயல்மீன்

கொள்ளை கொள்ளும் கூட லூரே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.4

கூற்றே ருருவின் குறளாய் * நிலநீர்

ஏற்றா னெந்தை பெருமா னூர்போல் *

சேற்றே ருழுவர் கோதைப் போதூண் *

கோல்தேன் முரலும் கூட லூரே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.5

தொண்டர் பரவச் சுடர்சென் றணவ *

அண்டத் தமரும் அடிக ளூர்போல் *

வண்ட லலையுள் கெண்டை மிளிர *

கொண்ட லதிரும் கூட லூரே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.6

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் *

துக்கம் துடைத்த துணைவ ரூர்போல் *

எக்க லிடுநுண் மணல்மேல் * எங்கும்

கொக்கின் பழம்வீழ் கூட லூரே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.7

கருந்தண் கடலும் மலையு முலகும் *

அருந்தும் அடிகள் அமரு மூர்போல் *

பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி *

குருந்தம் தழுவும் கூட லூரே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.8

கலைவாழ் பிணையோ டணையும் * திருநீர்

மலைவா ழெந்தை மருவு மூர்போல் *

இலைதாழ் தெங்கின் மேல்நின்று *

இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.9

பெருகு காத லடியேன் உள்ளம் *

உருகப் புகுந்த வொருவ ரூர்போல் *

அருகு கைதை மலர * கெண்டை

குருகென் றஞ்சும் கூட லூரே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.2.10

** காவிப் பெருநீர் வண்ணன் * கண்ணன்

மேவித் திகழும் கூட லூர்மேல் *

கோவைத் தமிழால் கலியன் சொன்ன *

பாவைப் பாடப் பாவம் போமே