001-Thiruarangam


Thiru arangam ( Srirangam – Sri Ranganathaswamy Temple )

Azhwar Paasuram Count Video Audio
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
35

ஆண்டாள் நாச்சியார் திருமொழி
10

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
31

திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்
10

திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி
4

தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை
45

தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி
10

திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான்
10

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
58

திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
4

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
9

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
1

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
4

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
2

நம்மாழ்வார் திருவிருத்தம்
1

நம்மாழ்வார் திருவாய்மொழி
11

Total
247

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.7.2

கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள் *

உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய் *

திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய் *

மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்

  

 

  

 

  


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.7.8

சீமா லிகனவ னோடு தோழமை கொள்ளவும் வல்லாய் *

சாமாறு அவனைநீ யெண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய் *

ஆமா றறியும் பிரானே அணியரங் கத்தே கிடந்தாய் *

ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்

  

 

  

 

  


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.9.11

** வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ்  வருபுனல் காவிரித் தென்ன ரங்கன் *

பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான்விட்டு சித்தன் பாடல் *

கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன்அடி யார்க ளாகி *

எண்திசைக் கும்விளக் காகி நிற்பார் இணையடி என்தலை மேல னவே

  

 

  

 

  


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.3.2

கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம் *

மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து *

உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன் *

என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா

  

 

  

 

  


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.1

** மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை *

ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் *

தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும் *

போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே

  

 

  

 

  


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.2

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் *

இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர் *

மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார் *

சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே

  

 

  

 

  


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.3

மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் *

உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் *

திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை *

பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே

  

 

  

 

  


8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.4

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு *

ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய *

கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர் *

தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே

  

 

  

 

  


9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.5

பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை *

உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண் பெறுத்தானூர் *

குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ் *

திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே

  

 

  

 

  


10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.6

கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே *

ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் *

தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து *

யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே

  

 

  

 

  


11   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.7

கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய *

பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர் *

தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு *

தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே

  

 

  

 

  


12   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.8

வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் *

எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் *

எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி *

மல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே

  

 

  

 

  


13   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.9

குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல் *

நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர் *

குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி *

மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே

  

 

  

 

  


14   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.8.10

** பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை *

செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல் *

திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு *

இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே

  

 

  

 

  


15   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.1

** மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழ *

செருவுடைய திசைக்கருமம்திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில் *

திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்று *

உருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளிய ரங்கமே

  

 

  

 

  


16   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.2

** தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல் *

என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும் *

மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த *

என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே

  

 

  

 

  


17   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.3

கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும் *

உருளுடைய சகடரையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான் *

இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி *

அருள்கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வா னமருமூர் அணிய ரங்கமே

  

 

  

 

  


18   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.4

பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்ய * துவரை யென்னும்

அதில்நா யகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் *

புதுநாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான் *

பொதுநா யகம்பாவித்து இருமாந்து பொன்சாய்க்கும் புனல ரங்கமே

  

 

  

 

  


19   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.5

ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய் அவனியாய் அருவ ரைகளாய் * நான்முகனாய்

நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானு மானான் *

சேமமுடை நாரதனார் சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில் *

பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ்குழறும் புனல ரங்கமே

  

 

  

 

  


20   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.6

மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களையே மன்ன ராக்கி *

உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் *

பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் *

சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய் நிற்கின்ற திருவ ரங்கமே

  

 

  

 

  


21   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.7

குறட்பிரம சாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி *

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில் *

எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல

அரவணையின்வாய் * சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே

  

 

  

 

  


22   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.8

உரம்பற்றி இரணியனை உகிர்நுதியால் ஒள்ளியமார் புறைக்க வூன்றி *

சிரம்பற்றி முடியிடியக் கண்பிதுங்க வாயலரத் தெழித்தான் கோயில் *

உரம்பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடிபோல் உயர்ந்து காட்ட *

வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ண ரங்கமே

  

 

  

 

  


23   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.9

தேவுடைய மீனமாய் ஆமையாய்

ஏனமாய் அரியாய்க் குறளாய் * மூவுருவி

லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்

முடிப்பாங் கோயில் * சேவலொடு

பெடையன்னம் செங்கமல மலரேறி

ஊச லாடி * பூவணைமேல் துதைந்தெழுசெம்

பொடியாடி விளையாடும் புனல ரங்கமே

  

 

  

 

  


24   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.10

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செய்யும் நாந்தக மென்னும்

ஒருவாளன் * மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன் *

இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழுலகப் பெரும்புர வாளன் *

திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவ ரங்கமே

  

 

  

 

  


25   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.11

** கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப் படையுடையான் கருதும் கோயில் *

தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் திருப்ப தியின்மேல் *

மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்ததமி ழுரைக்க வல்லார் *

எஞ்ஞான்றும் எம்பெருமா னிணையடிக்கீழ் இணைபிரியா திருப்பர் தாமே

  

 

  

 

  


26   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.1

** துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே *

ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால் *

எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன் *

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


27   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.2

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தி னானே *

நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்த மர்கள் *

போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை *

ஆமிடத் தேஉன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


28   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.3

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது *

நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே *

சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *

அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


29   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.4

ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே *

முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயோ *

அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற *

அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


30   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.5

பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி *

உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை *

வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய் *

ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


31   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.6

தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர் *

மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய் *

எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு

என்றும் * அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


32   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.7

செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே *

எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா *

வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது *

அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


33   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.8

நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு * இந்த

ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன் *

வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னே * என்

ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


34   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.9

குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவ னேஎம் மானே *

அன்று முதல்இன் றறுதி யாக ஆதியஞ் சோதி மறந்த றியேன் *

நன்றும் கொடிய நமன்த மர்கள் நலிந்து வலிந்துஎன்னைப் பற்றும் போது *

அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

  

 

  

 

  


35   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.10

** மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும் *

ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை *

வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை

பத்தும் * தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே

  

 

  

 

  


36   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.1

** தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ *

யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர் *

தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர் *

ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

  

 

  

 

  


37   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.2

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர் *

குழலழகர் வாயழகர் கண்ணழகர் * கொப்பூழில்

எழுகமலப் பூவழக ரெம்மானார் * என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

  

 

  

 

  


38   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.3

** பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் *

அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான் *

செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார் *

எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே

  

 

  

 

  


39   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.4

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார் *

பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற *

பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல் *

இச்சை யுடையரே லித்தெருவே போதாரே

  

 

  

 

  


40   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.5

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று *

எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான் *

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான் *

இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

  

 

  

 

  


41   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.6

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் * காவிரிநீர்

செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார் *

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது * நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே

  

 

  

 

  


42   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.7

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து *

பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம் *

திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார் *

எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே

  

 

  

 

  


43   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.8

** பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு * பண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் *

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் *

பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

  

 

  

 

  


44   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.9

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் *

திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து *

அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த *

பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

  

 

  

 

  


45   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 11.10

** செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த *

மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் *

தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல் *

தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே

  

 

  

 

  


46   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.1

** இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த *

அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி *

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் *

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே

  

 

  

 

  


47   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.2

** வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ *

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ் *

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே

  

 

  

 

  


48   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.3

எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு *

எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற * செம்பொன்

அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே

  

 

  

 

  


49   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.4

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணை * வன் குன்ற மேந்தி

ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்

பாவினை * அவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

  

 

  

 

  


50   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.5

இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த *

துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த *

மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே

  

 

  

 

  


51   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.6

அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும் *

தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும் *

களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் *

ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே

  

 

  

 

  


52   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.7

மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்

துறந்து * இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான *

அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே

  

 

  

 

  


53   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.8

கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் *

காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப *

சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் *

மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே

  

 

  

 

  


54   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.9

தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி *

ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி * நாளும்

சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் *

போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே

  

 

  

 

  


55   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.10

** வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய *

துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ *

அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து * அடியார் தங்கள்

இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே

  

 

  

 

  


56   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 1.11

** திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் *

கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் *

குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த *

நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே

  

 

  

 

  


57   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.1

** தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத் * திரு மாதுவாழ்

வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய் *

ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம் *

ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே

  

 

  

 

  


58   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.2

தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும் * சுடர் வாளியால்

நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து *

ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி

ஆடனாம்பெறில் * கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே

  

 

  

 

  


59   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.3

ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய் *

மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி * வண் பொன்னிப்பே

ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம் *

சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே

  

 

  

 

  


60   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.4

தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு *

ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன ரங்கனுக்கடி யார்களாய் *

நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்துமெய்தழும் பத்தொழு

தேத்தி * இன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே

  

 

  

 

  


61   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.5

பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன் *

செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம் *

மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய் *

மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே

  

 

  

 

  


62   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.6

ஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான் *

பாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட *

தீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே *

காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே

  

 

  

 

  


63   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.7

காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய் *

ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை *

சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால் *

வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே

  

 

  

 

  


64   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.8

மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய் *

மாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை *

மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே *

மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே

  

 

  

 

  


65   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.9

மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று *

எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் தாடிப்பாடியி றைஞ்சி * என்

அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி * அவனுக்கே

பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும் பித்தரே

  

 

  

 

  


66   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.10

** அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம் *

எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம் *

கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன் *

சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே

  

 

  

 

  


67   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.1

** மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் *

இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான் *

ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் *

மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே

  

 

  

 

  


68   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.2

நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும் *

ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான் *

ஆலியா அழையா அரங்கா வென்று *

மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

  

 

  

 

  


69   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.3

மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும் *

பாரி னாரொடும் கூடுவ தில்லையான் *

ஆர மார்வ னரங்க னனந்தன் * நல்

நார ணன்நர காந்தகன் பித்தனே

  

 

  

 

  


70   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.4

உண்டி யேயுடை யேயுகந் தோடும் * இம்

மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான் *

அண்ட வாண னரங்கன் * வன் பேய்முலை

உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே

  

 

  

 

  


71   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.5

தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய் *

நீதி யாரொடும் கூடுவ தில்லையான் *

ஆதி ஆய னரங்கன் * அந் தாமரைப்

பேதை மாமண வாளன்றன் பித்தனே

  

 

  

 

  


72   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.6

எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன் *

உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன் *

தம்பி ரானம ரர்க்கு * அரங் கநகர்

எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே

  

 

  

 

  


73   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.7

எத்தி றத்திலும் யாரொடும் கூடும் * அச்

சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் *

அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் *

பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே

  

 

  

 

  


74   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.8

பேய ரேயெனக் கியாவரும் * யானுமோர்

பேய னேயெவர்க் கும்இது பேசியென் *

ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் *

பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே

  

 

  

 

  


75   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 3.9

** அங்கை யாழி யரங்க னடியிணை * தங்கு

சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய் *

கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல் *

இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே

  

 

  

 

  


76   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.10

** தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே *

யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே *

காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே *

ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ

  

 

  

 

  


77   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 21

அரங்கனே தரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ் *

மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய் *

நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார் *

குரங்கையா ளுகந்தவெந்தை கூறுதேற வேறிதே

  

 

  

 

  


78   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 49

** கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு வுனி வுன் *

உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர் *

நண்டை உண்டு நாரை யோ வாளை பாய நீலமே *

அண்டை கொண்டு கெண்டை மேயுமு அந்தண் நீர்அரங்கமே

  

 

  

 

  


79   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 50

வெண்திரைக் கருங்கடல் சிவந்துவேவ முன் ஒர் நாள் *

திண்திறற் சிலைக்கைவாளி விட்டவீரர் சேரும் ஊர் *

எண் திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்த நீர் *

வண்டுஇரைத்த சோலை வேலி மன்னுசீர் அரங்கமே

  

 

  

 

  


80   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 51

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் *

சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் *

பரந்துபொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் *

அரங்கம் என்பர் நான்முகத்து அயன்பணிந்த கோயிலே

  

 

  

 

  


81   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 52

பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப் *

பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் *

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர் *

அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே

  

 

  

 

  


82   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 53

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான் *

கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்

தோட * வாண னாயிரம் கரங்கழித்த வாதிமால் *

பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே

  

 

  

 

  


83   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 54

இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன் *

மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம் *

குலைத்தலைத்தி றுத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு *

அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே

  

 

  

 

  


84   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 55

மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய் *

பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும் *

உன்னபாத மென்னசிந்தை மன்னவைத்து நல்கினாய் *

பொன்னிசூ ழரங்கமேய புண்டரீக னல்லையே

  

 

  

 

  


85   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 93

சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே *

விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே *

கரும்பிருந்த கட்டியேக டல்கிடந்த கண்ணனே *

இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே

  

 

  

 

  


86   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 119

** பொன்னிசூழ ரங்கமேய பூவைவண்ணமாயகேள் *

என்னதாவி யென்னும் வல்வினையினுள்கொ ழுந்தெழுந்து *

உன்னபாத மென்னநின்ற வொண்சுடர்க்கொ ழுமலர் *

மன்னவந்து பூண்டுவாட்ட மின்றுயெங்கும் நின்றதே

  

 

  

 

  


87   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 3

பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும் *

ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார் * ஞாலத்

தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை * அப்பில்

அருபொருளை யானறிந்த வாறு

  

 

  

 

  


88   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 30

அவனென்னை யாளி அரங்கத்து * அரங்கில்

அவனென்னை எய்தாமல் காப்பான் * அவனென்ன

துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே *

வெள்ளத் தரவணையின் மேல்

  

 

  

 

  


89   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 36

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *

நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்

தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *

அணைப்பார் கருத் தனா வான்

  

 

  

 

  


90   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 60

ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று * நின்

தாட்பார்த் துழிதருவேன் தன்மையை * கேட்பார்க்

கரும்பொருளாய் நின்ற அரங்கனே * உன்னை

விரும்புவதே விள்ளேன் மனம்

 

  

 

  

 

  


91   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 1

** காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து *

நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே *

மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற *

ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


92   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 2

** பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண் *

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் *

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் *

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


93   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 3

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும் *

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு *

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் *

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


94   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 4

மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால் *

கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான் *

இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய *

பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே

  

 

  

 

  


95   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 5

பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு *

உண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து *

தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி *

தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்குமாறே

  

 

  

 

  


96   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 6

மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு *

புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர் *

அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே *

புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே

  

 

  

 

  


97   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 7

புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம் *

கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம் *

தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா *

சிலையினா லிலங்கை செற்ற  தேவனே தேவனாவான்

  

 

  

 

  


98   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 8

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் * நின்பால்

பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி *

குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே *

அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


99   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 9

மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள் *

உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர் *

அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை *

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே

  

 

  

 

  


100   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 10

நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே *

காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம் *

கேட்டிரே நம்பி மீர்காள் கெருடவா கனனும் நிற்க *

சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே

  

 

  

 

  


101   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 11

ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய *

செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார் *

மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா *

கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே

  

 

  

 

  


102   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 12

நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க *

நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி *

அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர் *

கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே

  

 

  

 

  


103   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 13

எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம் *

வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த *

அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில் *

பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே

  

 

  

 

  


104   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 14

** வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை *

கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை *

அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா *

மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே

  

 

  

 

  


105   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 15

மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல *

பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான் *

உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை *

ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே

  

 

  

 

  


106   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 16

சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம் *

மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை *

போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து * தன்பால்

ஆதரம் பெருகவைத்த அழகனூ ரரங்க மன்றே

  

 

  

 

  


107   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 17

விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை *

இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம் *

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *

கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே

  

 

  

 

  


108   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 18

இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே *

தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான் *

கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள் *

பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே

  

 

  

 

  


109   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 19

** குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி *

வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி *

கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு *

உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே

  

 

  

 

  


110   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 20

பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட *

மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும் *

தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும் *

ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே

  

 

  

 

  


111   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 21

பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு *

துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய் *

அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில் *

மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே

  

 

  

 

  


112   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 22

பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது *

ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன் *

மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால் *

பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்

  

 

  

 

  


113   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 23

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு *

பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள் *

எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் *

எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே

  

 

  

 

  


114   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 24

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள் *

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டும் *

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய் *

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே

  

 

  

 

  


115   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 25

குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை *

ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன் *

களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறு கின்றேன் *

அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


116   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 26

போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன் *

தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன் *

காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே *

ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே

  

 

  

 

  


117   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 27

குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி *

தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன் *

மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் *

அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே

  

 

  

 

  


118   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 28

உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி *

செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார் *

நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா *

எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே

  

 

  

 

  


119   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 29

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை *

பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி *

காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன் *

ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


120   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 30

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை *

சினத்தினால் செற்றம் நோக்கித்  தீவிளி விளிவன் வாளா *

புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா *

எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே

  

 

  

 

  


121   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 31

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன் *

உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன் *

துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன் *

அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


122   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 32

ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள் *

கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும் *

மார்க்கமொன் றறிய மாட்டா மனிசரில் துரிச னாய *

மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே

  

 

  

 

  


123   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 33

மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு *

பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன் *

ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால் *

பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே

  

 

  

 

  


124   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 34

உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா *

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு *

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று *

வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே

  

 

  

 

  


125   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 35

தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய் *

சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே *

ஆவியேஅமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய் *

பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே

  

 

  

 

  


126   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 36

மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே *

உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு *

உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே * உன்னை யன்றே

அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


127   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 37

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும் *

ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார் *

எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார் *

அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே

  

 

  

 

  


128   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 38

** மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து *

ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி *

காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து * வாழும்

சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே

  

 

  

 

  


129   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 39

அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில் *

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும் *

முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும் *

அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


130   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 40

திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து *

மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம் *

வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும் *

அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


131   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 41

வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில் *

தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில் *

ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும் *

போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே

  

 

  

 

  


132   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 42

பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள் *

இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில் *

தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க *

வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே

  

 

  

 

  


133   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 43

அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி *

தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும் *

நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில் * ஆங்கே

அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே

  

 

  

 

  


134   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 44

** பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான் *

எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப *

விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த

கண்ணறா * உன்னை யென்னோ களைகணாக் கருது மாறே

  

 

  

 

  


135   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 45

** வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள் *

கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை *

துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல் *

இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே

  

 

  

 

  


136   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 1

** கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் *

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி *

எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் *

அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


137   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 2

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக் கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ *

எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம் ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி *

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்

கனுங்கி * அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


138   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 3

சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி *

படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின் *

மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ *

அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

  

 

  

 

  


139   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 4

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் *

ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை *

வாட்டிய வரிசிலை வானவ ரேறே மாமுனி வேள்வியைக் காத்து * அவ பிரதம்

ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


140   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 5

புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி *

கலந்தது குணதிசை கனைகட லரவம் களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த *

அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா *

இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


141   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 6

இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ இறையவர் பதினொரு விடையரு மிவரோ *

மருவிய மயிலின னறுமுக னிவனோ மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி *

புரவியோ டாடலும் பாடலும் தேரும் குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம் *

அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


142   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 7

அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ *

இந்திர னானையும் தானும்வந் திவனோ எம்பெரு மானுன் கோயிலின் வாசல் *

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் *

அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


143   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 8

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா *

எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர் *

தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி *

அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


144   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 9

** ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி *

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம் *

மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் *

ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

  

 

  

 

  


145   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 10

** கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ *

துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித் துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா *

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்

அடியனை * அளியனென் றருளியுன் னடியார்க் காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே,

  

 

  

 

  


146   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 1

** அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் * விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் *

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் * திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே

  

 

  

 

  


147   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 2

உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற *

நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை *

கவர்ந்த வெங்கணைக்காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான் * அரைச்

சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே

  

 

  

 

  


148   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 3

** மந்தி பாய்வட வேங்கட மாமலை * வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான் *

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில் *

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே

  

 

  

 

  


149   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 4

சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து

உதிர வோட்டி * ஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன் *

மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் * திருவயிற்

றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே

  

 

  

 

  


150   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 5

பாரமாய பழவினை பற்றறுத்து * என்னைத்தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான் *

கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான் * திரு

வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே

  

 

  

 

  


151   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 6

துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய

வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேயவப்பன் *

அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை * முற்றும்

உண்ட கண்டங்கண் டீரடி யேனை யுய்யக்கொண்டதே

  

 

  

 

  


152   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 7

கையினார் சுரிசங்கன லாழியர் * நீள்வரைபோல்

மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்

ஐயனார் * அணியரங்கனா ரரவின ணைமிசை மேயமாயனார் *

செய்யவா யையோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

  

 

  

 

  


153   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 8

பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட * அமரர்க்கு

அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து *

கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி * நீண்டவப்

பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே

  

 

  

 

  


154   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 9

** ஆலமாமரத்தி னிலைமே லொருபாலகனாய் *

ஞாலமேழு முண்டா னரங்கத் தரவி னணையான் *

கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் *

நீலமேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே

  

 

  

 

  


155   திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 10

** கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன் * என் னுள்ளம் கவர்ந்தானை *

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள் * மற் றொன்றினைக் காணாவே

  

 

  

 

  


156   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.2

** பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை *

பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம் *

வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி * நாடொறும்

தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே

  

 

  

 

  


157   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.6

** எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள் *

தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள் *

வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும் *

இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ

  

 

  

 

  


158   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.1

** உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்

எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கிட மென்பரால் *

சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி *

அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே

  

 

  

 

  


159   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.2

வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி *

பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால் *

தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை *

செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே

  

 

  

 

  


160   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.3

பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்

கொண்ட * ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால் *

வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி *

அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே

  

 

  

 

  


161   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.4

விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட *

வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால் *

துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி * முன்

திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே

  

 

  

 

  


162   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.5

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக *

அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால் *

உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும் * நல்

செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே

  

 

  

 

  


163   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.6

கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென *

முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால் *

குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி * முன்

அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே

  

 

  

 

  


164   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.7

கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால் *

துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால் *

மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும் * மாமறையோர்

செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே

  

 

  

 

  


165   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.8

ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய் *

தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால் *

வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும் * நல்

தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே

  

 

  

 

  


166   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.9

சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய * இம்

மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால் *

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி *

ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே

  

 

  

 

  


167   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.4.10

** அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை*

கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல் *

நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண்டும் * உடன்

வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே

  

 

  

 

  


168   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.1

** வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால் *

மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள் * வண்டார் கொண்டல்

உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட

திருவாளன் * என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே

  

 

  

 

  


169   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.2

கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான் *

விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் * மெய்ய

மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச்

சிலையாளன் * என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே

  

 

  

 

  


170   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.3

மானாய மென்னோக்கி வாநெடுங் கண்ணீர்மல்கும் வளையும் சோரும் *

தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின் *

கானாயன் கடிமனையில் தயிருண்டு  நெய்பருக நந்தன் பெற்ற

ஆனாயன் * என் மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே

  

 

  

 

  


171   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.4

தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை

யே * ஆரச் சாந்தணியாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *

பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய் *

மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கி லேனே

  

 

  

 

  


172   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.5

பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள் *

ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *

நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி *

ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே

  

 

  

 

  


173   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.6

தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின் *

யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் * பூமேல்

மாதாளன் குடமாடி ம துசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற

தூதாளன் * என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லுகேனே

  

 

  

 

  


174   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.7

வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள் * எண்ணில்

பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான் *

தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன் *

என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே

  

 

  

 

  


175   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.8

உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால் *

மறவாதே யெப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின் றளால் *

பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்

அறவாளன் * என்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே

  

 

  

 

  


176   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.9

பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள் *

வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும் *

சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி *

அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே

  

 

  

 

  


177   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.10

** சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த *

நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை * நேரார்

காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார் *

மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே

  

 

  

 

  


178   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.1

** கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை *

மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை *

எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த

வம்மானை * யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே

  

 

  

 

  


179   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.2

** பேரானைக் குறுங்குடியெம் பெருமானை * திருதண்கால்

ஊரானைக் கரம்பனூர் உத்தமனை * முத்திலங்கு

காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும் *

அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே

  

 

  

 

  


180   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.3

ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும் *

தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும் *

தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை * மகிழ்ந்தொருகால்

ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே

  

 

  

 

  


181   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.4

வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம் *

தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்

பிளந்தவனை * பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்

அளந்தவனை * யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே

  

 

  

 

  


182   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.5

நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை * அன்றரக்கன்

ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே *

பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின் *

ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே

  

 

  

 

  


183   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.6

தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை * தரியாது

கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை *

வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த *

அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே

  

 

  

 

  


184   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.7

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை * பிரியாது

வந்தெனது மனத்திருந்த வடமலையை * வரிவண்டார்

கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த

அந்தணனை * யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே

  

 

  

 

  


185   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.8

துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும் *

அவர்கட்கங் கருளில்லா அருளானை * தன்னடைந்த

எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும் *

அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே

  

 

  

 

  


186   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.9

பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து *

மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை *

மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின் *

அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே

  

 

  

 

  


187   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.10

** ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை *

காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர் *

நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும் *

நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே

  

 

  

 

  


188   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.1

** பண்டைநால் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் *

பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும் *

கொண்டல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும் *

அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


189   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.2

இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற *

தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்

பந்தமும் * பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம் *

அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


190   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.3

மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும் *

துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய *

பின்னும்வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட * ஒருநாள்

அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


191   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.4

மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி *

பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர *

சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப *

ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


192   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.5

எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம் *

பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து பொழிதரு மருவியொத் திழிய *

வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது *

அங்ஙனே யொக்க அரியுரு வானான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


193   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.6

ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள் *

ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய *

ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே *

ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


194   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.7

சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன் *

எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி *

வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட * மலையால்

அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


195   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.8

ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் * உலகில்

சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து *

பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட * பகலே

ஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


196   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.9

பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெருநிலம் விழுங்கி * அதுமிழ்ந்த

வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணிமுடி வானவர் தமக்குச்

சேயனாய் * அடியேற் கணியனாய் வந்தென் சிந்தையுள் வெந்துய ரறுக்கும் *

ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்  அரங்கமா நகரமர்ந் தானே

  

 

  

 

  


197   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.7.10

** பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து *

அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமா நகரமர்ந் தானை *

மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேற் கலியன்வா யொலிகள் *

பன்னிய பனுவல் பாடுவார் நாளும்  பழவினை பற்றறுப் பாரே

  

 

  

 

  


198   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.1

** ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து *

மாழை மான்மட நோக்கியுன் தோழி உம்பி யெம்பி யென் றொழிந்திலை * உகந்து

தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட *

ஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


199   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.2

வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை * உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று *

கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் * எனக்கும்

ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


200   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.3

கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் *

முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப *

கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து * உன்

அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

  

 

  

 

  


201   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.4

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா *

நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக்  கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து *

வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுள * அதற் கடியேன்

அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


202   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.5

மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன் * ,

தோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமை யிலத்தவிங் கொழிந்து *

போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய் என்ற பொன்னருள் * எனக்கும்

ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


203   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.6

மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்

தன்னை யஞ்சி * நின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா *

பின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள் * எனக்கும்

அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


204   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.7

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன் *

காத லென்மகன் புகலிடங் காணேன் கண்டு நீதரு வாயெனக் கென்று *

கோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய் *

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


205   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.8

வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி *

காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும் என்றழைப்ப *

ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய் *

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


206   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.9

** துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு *

உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப *

வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து * உலகம்

அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

  

 

  

 

  


207   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.8.10

** மாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் *

ஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை *

நீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த *

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே

  

 

  

 

  


208   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.9

தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாள ரேத்தநின்ற

பேராளன் * ஆயிரம்பே ருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர் *

பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த *

தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


209   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.4

உரங்க ளாலியன் றமன்னர் மாளப் பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று *

இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும்  எம்பி ரானைவம் பார்புனல் காவிரி *

அரங்க மாளியென் னாளிவிண் ணாளி ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று *

சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே

  

 

  

 

  


210   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.7

தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும் *

இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள் *

துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர் *

அரங்கமே என்ப திவள்தனக் காசையே

  

 

  

 

  


211   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.2

புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்

முனைவனை * மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை *

சினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான் *

கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே

  

 

  

 

  


212   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.3.7

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் * கைவளைகள்

என்னோ கழன்ற இவையென்ன மாயங்கள் *

பெண்ணானோம் பெண்மையோம் நிற்க * அவன்மேய

அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே

  

 

  

 

  


213   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.8.8

** அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா *

துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு *

மணியே மணிமா ணிக்கமே மதுசூதா *

பணியா யெனக்குய் யும்வகை பரஞ்சோதி

  

 

  

 

  


214   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 7

இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற *

மெய்ம்மையை விரிந் த சோலை வியந்திரு வரங்கம் மேய *

செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை *

தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே

  

 

  

 

  


215   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 12

ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால் *

தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம் *

பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று *

காவிபோல் வண் ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே

  

 

  

 

  


216   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 13

இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க * என்றன்

அரும்பி ணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு *

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *

கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே

  

 

  

 

  


217   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 19

** பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும் *

உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே

  

 

  

 

  


218   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 11

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள் *

எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *

மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை * மெய்யே

கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே

  

 

  

 

  


219   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 12

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள் *

நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும் *

அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும் *

எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே

  

 

  

 

  


220   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 14

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *

அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *

விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே

  

 

  

 

  


221   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 18

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் *

பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன் *

ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே

  

 

  

 

  


222   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 19

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டு

அற்றாள் * தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும் *

பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி *

பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே

  

 

  

 

  


223   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 22

நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும் *

செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய * இப்பால்

கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும் *

எவ்வளவுண் டெம்பெருமான் கோயில் என்றேற்குஇதுவன்றோ எழிலாலி என்றார் தாமே

  

 

  

 

  


224   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 23

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே *

தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக் *

கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக்  கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது *

புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே

  

 

  

 

  


225   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 24

இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட *

பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ *

ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து * என்

பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே

  

 

  

 

  


226   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 25

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் *

தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி *

என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு *

பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே

  

 

  

 

  


227   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 71

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர்

** ஆராமம் சூழ்ந்த வரங்கம்

  

 

  
 

 

  


228   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 118

** மன்னும் அரங்கத்தெம் மாமணியை * வல்லவாழ்

பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை

  

 

  
 

 

  


229   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 6

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான் *

இன்று மறப்பனோ ஏழைகாள் * அன்று

கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் *

திருவரங்க மேயான் திசை

  

 

  

 

  


230   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 28

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்

நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் * எனைப்பலரும்

தேவாதி தேவ னெனப்படுவான் * முன்னொருனாள்

மாவாய் பிளந்த மகன்

  

 

  

 

  


231   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 46

பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *

மணிதிகழும் வண்தடக்கை மால்

  

 

  

 

  


232   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 70

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளும் தண்பொருப்பு வேலை * தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே *

ஏவல்ல எந்தைக் கிடம்

  

 

  

 

  


233   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 88

திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை *

திறம்பா வருசென்றார்க் கல்லால் * திறம்பாச்

செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன் * வானோர்

கடிநகர வாசற் கதவு

  

 

  

 

  


234   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 61

** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *

இளங்குமரன் றன்விண் ணகர்

  

 

  

 

  


235   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 62

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு

  

 

  

 

  


236   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 28

தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம் * நடுவே

வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும் * வள்வாயலகால்

புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா அருளாய்

எண்ணந் துழாவு மிடத்து * உள வோபண்டும் இன்னன்னவே

  

 

  

 

  


237   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.1

** கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும் *

சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும் *

எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும் *

செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்செய்கின் றாயே

  

 

  

 

  


238   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.2

எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா என்னும்கண் ணீர்மல்க இருக்கும் *

எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய் என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும் *

முன்செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா தகுவதோ என்னும் *

முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே

  

 

  

 

  


239   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.3

வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும்மை யாக்கும் *

உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே என்னுமுள் ளுருகும் *

கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும் *

திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய் இவள்திறத் தென்செய்திட் டாயே

  

 

  

 

  


240   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.4

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும் *

கட்டமே காதல் என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா கடியைகாண் என்னும் *

வட்டவாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும் *

சிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே

  

 

  

 

  


241   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.5

சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய் என்னும்

வந்திக்கும் * ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும் *

அந்திப்போ தவுணன் உடலிடந் தானே அலைகடல் கடைந்தவா ரமுதே *

சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே

  

 

  

 

  


242   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.6

மையல்செய் தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் *

செய்யவாய் மணியே என்னும் தண் புனல்சூழ் திருவரங் கத்துள்ளாய்! என்னும் *

வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்விண் ணோர்முதல் என்னும் *

பைகொள்பாம் பணையாய் இவள்திறத் தருளாய் பாவியேன் செய்யற்பா லதுவே

  

 

  

 

  


243   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.7

பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்றநின் றானே *

காலசக் கரத்தாய் கடலிடங் கொண்ட கடல்வண்ணா கண்ணணே என்னும் *

சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் *

கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே

  

 

  

 

  


244   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.8

கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன் என்னும் *

அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே என்னும் *

எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் *

செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய் என்செய்கேன் என்திரு மகட்கே

  

 

  

 

  


245   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.9

** என்திரு மகள்சேர் மார்வனே! என்னும் என்னுடை யாவியே என்னும் *

நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வ னே என்னும் *

அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்ப னே என்னும் *

தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே தெளிகிலேன் முடிவிவள் தனக்கே

  

 

  

 

  


246   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.10

முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே என்னும் *

கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் *

வடிவுடை வானோர் தலைவ னே!என்னும் வண்திரு வரங்கனே என்னும் *

அடியடை யாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே

  

 

  

 

  


247   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.2.11

** முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல் *

துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன் *

முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார் *

முகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே